சீனாவுக்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை

by Staff / 14-04-2023 11:45:31am
சீனாவுக்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனாவுக்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இலங்கையின் அழிந்து வரும் டோக் மக்காக் குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கையில் உள்ள 1000 உயிரியல் பூங்காக்களில் இந்த இனத்தைச் சேர்ந்த குரங்குகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்று சீனா இலங்கையிடம் கோரியுள்ளது. இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த கலந்துரையாடல் நடந்து வருகின்றது. சர்வதேச தரத்தின்படி அழியும் நிலையில் உள்ள போதிலும், இலங்கையில் டோக் மக்காக்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

 

Tags :

Share via