காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்காரர்

by Staff / 15-04-2023 11:56:17am
காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்காரர்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ராணி சௌக் பகுதியில் பணியில் இருந்த காவலர் ஹர்தீப் சிங், வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றார். காரை நிறுத்தாமல் அந்த நபர்கள் ஹர்தீப் சிங் மீது மோதியுள்ளனர். இதில், காரின் முன்பக்கத்தில்(பானெட்) காவலர் விழுந்தார். அப்போதும் அந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தாததால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த காவலர் காரில் தெங்கியபடி சென்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.

 

Tags :

Share via