பறக்கும் விமானத்தில் இத்தாலி வாலிபரை பார்த்த உடன் காதலாகி கல்யாணத்தில் முடிந்தது.
பறக்கும் விமான பயணத்தில் இத்தாலி இளைஞரை பார்த்து அறிமுகமான கேரள பெண்ணும் பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணா என்பவர் உயர் கல்விக்காக அமெரிக்கா செல்லும் போது விமானத்தில் இத்தாலியைச் சேர்ந்த டேரியா என்ற இளைஞரை சந்தித்துள்ளார். இந்நிலையில், இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், இத்தாலி இளைஞரும் கேரள பெண்ணும் கேரள மாநிலம் பாலக்காட்டில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்களின் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :