சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு
சித்திரை மாத பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது. சித்திரை விஷு சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஏப்ரல் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து, 12ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 15ஆம் தேதியன்று விஷுக்கனி சிறப்பு தரிசனத்தில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றுடன் சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடைவதை ஒட்டி, இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
Tags :