மணமக்கள் மீது ஆசிட் வீசியதால் பரபரப்பு
திருமண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகள் மீது ஆசிட் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பஸ்தார் மாவட்டத்தில் உள்ள அம்பாள் பகுதியில் புதன்கிழமை இரவு திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென 7 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி மணமகள் மற்றும் மணமகன் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் ஊற்றினார். இதில் மருமகள், மருமகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :