மூன்று வடமாநில இளைஞர்களுக்கு மாவுக்கட்டு

by Staff / 11-04-2024 04:43:01pm
மூன்று வடமாநில இளைஞர்களுக்கு மாவுக்கட்டு

சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமை காவலர் மனைவி உட்பட இரண்டு பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில், வட மாநில இளைஞர்கள் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த சச்சின் குமார்(24), அங்கித்(24), அங்கித் யாதவ்(26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதற்காக சென்னைக்கு வந்து, பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via