தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ 5 வீரர்கள் உயிரிழப்பு.

by Editor / 20-04-2023 09:27:29pm
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ 5 வீரர்கள் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நொடிகளில் தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தது குறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் அளித்துள்ளார்!

 

Tags : தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ 5 வீரர்கள் உயிரிழப்பு.

Share via