பல லட்சம் கோடிகளை சுருட்டிய கேசிஆர்: ராகுல் காந்தி விமர்சனம்

by Staff / 26-11-2023 04:18:13pm
பல லட்சம் கோடிகளை சுருட்டிய கேசிஆர்: ராகுல் காந்தி விமர்சனம்

மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடியை தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் திருடிவிட்டதாக காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். சங்கரெட்டியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானா மாநிலத்தில் கேசிஆர் ஆட்சியில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கேசிஆர் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்றார். காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ராகுல் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via