அடித்தள இரும்பு கோணங்களை திருடியவர் கைது -196 கோணங்கள் மற்றும் கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகவீரபாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 02.04.2023 அன்று மேற்படி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் அடித்தள இரும்பு கோணங்கள் (Foundation Angles) காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து மேற்படி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த துரை மகன் இசக்கியப்பன் (32) என்பவர் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாசானமுத்து (37) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி நிறுவனத்தில் இருந்த அடித்தள இரும்பு கோணங்களை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் மேற்படி எதிரி மாசானமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,96,000/- மதிப்புள்ள 196 அடித்தள இரும்பு கோணங்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :