கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன்னிலையில் இளைஞர் வெட்டி படுகொலை

by Editor / 05-02-2023 10:53:27pm
கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன்னிலையில் இளைஞர் வெட்டி படுகொலை


மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் இன்று தைபூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருந்த போதே கிரிவல பாதையில் வைத்து அதே பகுதியை சேர்ந்த விருமாண்டி மகன் மணி என்ற மணிகண்டனை (26) மர்ம நபர் ஒருவர் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via