ரூ.8 கோடி மோசடி செய்த 2 பேர் கைது. 

by Editor / 20-04-2023 10:25:29pm
ரூ.8 கோடி மோசடி செய்த 2 பேர் கைது. 

தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த பிரின்ஸ் மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (47) என்பவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த நளராஜ் மகன் சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் மேற்படி ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த கேசவமூர்த்தி மகன் விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தி, சீலன் செல்வராஜ் மற்றும் விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்தில் உப்பு, இரும்புபொருட்கள் வாங்கப் போவதாக போலியான கொள்முதல்; ஆணையை காண்பித்து நம்பிக்கையை ஏற்படுத்தி அவருடைய வங்கி கணக்குகளிலிருந்து 2020ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரை ரூபாய் 8கோடியே 29 இலட்சத்து 18ஆயிரத்து 741 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு எவ்வித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றியுள்ளளர். இதுகுறித்து மேற்படி ஸ்டேன்லி சாம்ராஜ் கடந்த 22.02.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர்  அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரி சீலன் செல்வராஜ் மற்றும் எதிரி விஜய் ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.8 கோடி மோசடி செய்த 2 பேர் கைது. 
 

Tags : ரூ.8 கோடி மோசடி செய்த 2 பேர் கைது. 

Share via