பள்ளி மாணவர்கள் ஆல்பாஸ்.. அசத்தல் அறிவிப்பு

by Staff / 21-04-2023 04:37:12pm
பள்ளி மாணவர்கள் ஆல்பாஸ்.. அசத்தல் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுவை அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் 35% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via