கல்வித்துறையில் செயல்படும் 20 அதிகாரிகள் திடீர் மாற்றம்.

by Staff / 03-05-2023 02:48:05pm
கல்வித்துறையில் செயல்படும் 20 அதிகாரிகள் திடீர் மாற்றம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் விவரம் பின்வருமாறு: - "திருப்பூர் மாவட்ட அதிகாரி திருவளர் செல்வி, ஈரோடு மாவட்ட அதிகாரி ஐய்யனார், விருதுநகர் ஞானகவுரி, கோயமுத்தூர் பூபதி, பெரம்பலூர் அறிவழகன், திருச்சி பாலமுரளி, தஞ்சாவூர் சிவக்குமார் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட அதிகாரி புகழேந்தி, சேலம் முருகன், புதுக்கோட்டை மணிவண்ணன், தென்காசி கபீர், கள்ளக்குறிச்சி சரஸ்வதி, திருவள்ளூர் ராமன், சென்னை ஆறுமுகம், தஞ்சாவூர் முத்தையா உள்ளிட்டோர் இட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோன்று சென்னை தலைமையிடத்தில் துணை இயக்குநர்களாக பணியாற்றும் பாலதண்டாயுதபாணி, மஞ்சுளா, சுமதி, குழந்தை ராஜன் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்திற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி பணியிட மாற்றம் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via