வைகை கரையோரம் வாலிபர் படுகொலை.
திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்த நிலையில் அதிகாலை 3. 30 மணியளவில் மதிச்சியம் ஆர் ஆர் மண்டபம் அருகே நின்ற வாலிபர் ஒருவரை பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அவ்வழியே வந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.இதனால் திருவிழா காண வந்த பக்தர்கள் அலறி அடித்து ஒடியிருக்கின்றனர்.பின்னர் அந்தக்கும்பல் அங்கிருந்த டீக்கடை மற்றும் கடைகளை சூறையாடிவிட்டு டீக்கடைகாரர் குருவை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த தகவல் அறிந்த பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல் கட்ட விசாரணையில் மதுரை சோலையழகுபுரம் எம் கே புரத்தைச் சேர்ந்த வாலிபர் சூர்யா (24) என்று தெரியவந்தது.அவரை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை சம்பவம் திருவிழா காண வந்த மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :