பழைய கட்டிலை கொடுத்ததால் திருமணம் நிறுத்தம்
தெலுங்கானா மாநிலம் பண்ட்லகுடாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் முகமது ஜக்காரியாவுக்கும், பந்தலகுடாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை மதியம் திருமணம் நடைபெற்றது. ஆனால் மாமியார் அனுப்பிய கட்டில் பாகங்களை பார்த்த போது உடைத்திருந்தது தெரியவந்தது. உடனே திருமணத்திற்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு பழைய கட்டிலை ஏன் கொடுத்தீர்கள் என மாப்பிள்ளை தகராறு செய்தார். போலீஸ் தலையீட்டிற்குப் பிறகு, மணமகன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார், ஆனால் மணமகளின் தந்தை இதற்கு மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
Tags :