டிஎன்ஏ வில்‌ பிறந்த மூன்று குழந்தைகள்

by Staff / 11-05-2023 04:00:40pm
 டிஎன்ஏ வில்‌ பிறந்த மூன்று குழந்தைகள்

பிரிட்டனில் முதல்முறையாக மூன்று டிஎன்ஏக்கள் மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் டிஎன்ஏவிலுள்ள பெரும்பாலான பகுதி அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையது. ஆனால் 0.1 சதவீதம் மட்டும் மூன்றாம் நபருடைய டிஎன்ஏ ஆகும். குழந்தைகள் மைட்டோகாண்ட்ரியா நோய்களுடன் பிறப்பதை தடுக்கவே இந்த மாதிரி மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் பிறக்கப்படும் குழந்தைகளுக்கு நிரந்தரமாக இந்த டிஎன்ஏ மாற்றம் இருக்கும். ஆனால் தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. உலகளவில் மைட்டோகாண்ட்ரியா நோயால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடப்பட்டது.

 

Tags :

Share via