செல்போனில் பேசியபடி சென்ற மாணவி ரயில்மோதி பலி 

by Editor / 11-05-2023 10:24:33pm
செல்போனில் பேசியபடி சென்ற மாணவி ரயில்மோதி பலி 

சென்னை அடுத்த புது பெருங்களத்துரை சேர்ந்தவர் ரகுராமன். இவர் காட்டாங்குளத்தூர் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா. இவர் சென்னை எஸ் ஆர்.எம் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவருகிறார்.செல்போன் பேசியபடி ரயில் தண்டவாளத்தை  கடக்கும் போது இருந்து திருச்சி செல்லும் பல்லவன் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதியது தெரியவந்துள்ளது.கல்லூரி மாணவர்கள் பலர் செல்போன் பேசிய படி ரயில் தண்டவாளம் கடக்கும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்து வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

Tags :

Share via