குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை-2 பேர் கைது.

by Editor / 15-05-2023 08:23:28am
குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை-2 பேர் கைது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் சரகம் வல்லம்  கிணற்றடி தெருவை சேர்ந்த இசக்கி என்பவரது  மகன் சுடலை( வயது 45) இவர் கேரளாவிலிருந்து குற்றால ஸீசனுக்கு பழங்கள் வாங்கிவந்து மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார்.கேரளாவில் கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இவர் உறவினர் ஒருவர் இறந்த விசேஷத்திற்கு ஊருக்கு வந்தநிலையில் நேற்று உறவினர் விட்டு விசேஷம் நடந்தநிலையில் இவர் வல்லம் வண்ணான் துறை பகுதியில் உள்ள சுடலை மாடன் கோவில் அருகே உள்ள தோப்பு பகுதிக்கு  சென்று விட்டு ஒருமரத்தின் அடியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது அப்போது அவரை அதே பகுதியைசேர்ந்த காளிதாஸ், சங்கர்,கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை மற்றும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்,தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து  கொலைசெய்யப்பட்ட நபரின் உடலை பார்வையிட்டு சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுடலையின் மனைவி இளவரசி கொடுத்த புகாரின் அடிப்படையில்  மேலும்இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வீசி தேடி வந்த நிலையில் இரண்டு நபர்களை வல்லம் பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.கேரளாவிலிருந்து பழங்கள் எடுத்துவந்து மொத்தவிற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டிகாரணமாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தகவல்.

குற்றாலம் அருகே ஒருவர் கழுத்தறுத்து கொலை-2 பேர் கைது.
 

Tags :

Share via