ஊராட்சி மன்ற தலைவர் கணவர் வெட்டி படுகொலை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சங்கர் என்ற சுந்தரகோபால் இவரது மனைவி தற்போது தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் இன்று இரவு 7 மணி அளவில் இளங்குடி பட்டியில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை எடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது சங்கர் என்ற சந்திரகோபால் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் நமண சமுத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நகர சமுத்திரம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது பின்னர் கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த கொலை சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து பல்வேறு விதமான கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி கும்பிடச் சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி தற்போது தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
Tags :