விரிவடைகிறது வந்தேபாரத் சேவை 

by Editor / 15-05-2023 10:08:07am
விரிவடைகிறது வந்தேபாரத் சேவை 

வடகிழக்கு,தென்கிழக்கு ரயில்வேயில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்படவுள்ளன. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் சேவை ஒடிசாவில் பூரி - ஹவுரா வழித்தடத்தில் தொடங்கும். அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரயில்வேயில் இரண்டாவது ரயில், புதிய ஜல்பைகுரி - குவஹாத்தி வழித்தடத்தில் அதிவேக ரயில் தொடங்கும். வடகிழக்கு இந்தியாவில் தொடங்கப்படும் ரயிலின் முதல் சேவை இதுவாகும். இதற்குப் பிறகு, பாட்னா - ராஞ்சி வழித்தடத்தில் முன்கூட்டியே ரயிலை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழித்தடத்தில் ஏற்கனவே வந்தே பாரத் ரயிலின் இயக்கம் நடைபெற்றுவருகிறது.

 

Tags :

Share via