மனைவியை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த கணவன்

by Editor / 14-12-2021 12:42:12pm
மனைவியை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த கணவன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்லத்துரை இவரது மனைவி இந்துமதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த அகளங்கன் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டில் இவரது மனைவி குடும்ப பிரச்சனைக்காரணமாக தங்கி இருந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து  மனைவி இந்துமதியை  வீட்டிற்கு வருமாறு செல்லத்துரை அழைத்துள்ளார்.கணவர் அழைத்தும் மனைவி வீட்டிற்கு வராத காரணத்தால் கோபமடைந்த செல்லத்துரை மனைவி இந்துமதியை கிவரது உறவினர் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.இதனைத்தொடர்ந்து  செல்லத்துரையை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்த பொது வேளாங்கண்ணி போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via