பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவை புறக்கணித்த மருமகள் மேகன் மார்கல்..

by Staff / 10-05-2023 04:45:06pm
பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவை புறக்கணித்த மருமகள் மேகன் மார்கல்.. பிரிட்டனை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த போதிலும் முடிசூட்டு விழா நடைபெறாமலே இருந்தது.இந்நிலையில், லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள west minster abbeyயில் 3ஆம் சார்ல்ஸ்சின் முடிசூட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 74 வயதான 3ஆம் சார்லஸ்சுக்கு மன்னராக முடிசூட்டப்பட்டது. விழாவில் அவருடன் மனைவி கமிலா உடன் இருந்தார். இதற்காக லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினர் உள்பட உலகின் முன்னணி பிரமுகர்கள் இதில் பங்கேற்னர்.இருப்பினும் அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் இதில் பங்கேற்கவில்லை. மன்னர் சார்லஸ்சின் இரண்டாவது மகனான ஹாரியின் மனைவி. அதாவது சார்லஸ்சின் மருமகள் மேகன் மார்கல் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அரசக் குடும்பத்துடன் மோதல் ஏற்பட்டு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அரச கடமைகளை விட்டுவிட்டு தங்கள் குழந்தைகளுடன் 2020ஆம் ஆண்டில் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.இதற்கு முக்கிய காரணம் இளவரசர் ஹாரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒரு முறை சண்டையின் போது வில்லியம் தன்னை காலரைப் பிடித்து அடித்து தரையில் தள்ளினார் என ஹாரி வெளிப்படையாக புகார் தெரிவித்தார். இந்த பூசல் காரணமாக ஹாரி- மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.இப்படி இருக்க தந்தையின் முடிசூட்டு விழாவில் ஹாரி மட்டுமே பங்கேற்றுள்ளார். மனைவி மேகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஆர்க்கி, லில்லிபெட் பங்கேற்கவில்லை. கணவருக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட அவமதிப்பை மனதில் வைத்து தான் மேகன் மற்றும் குழந்தைகள் நிகழ்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 

Tags :

Share via