அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு கத்திக்குத்து
நாகப்பட்டினத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சுற்றுலா முடிந்து அரசு பேருந்தில் வந்து கொண்டு இருந்தவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே பயணச்சீட்டு வழங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடத்துனரை பயனாளிகள் இருவர் தாக்கியதாகவும் நடத்துனருக்கு ஆதரவாக வந்த மூன்று பேரும் பரமகுரு மணிரத்தினம் ஆகிய பயணிகளை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக சொல்லப்படுகிறது. இருவருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :