சிறுமியிடம் பெற்ற கருமுட்டை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை இணை இயக்குனர்

by Staff / 07-06-2022 11:22:24am
சிறுமியிடம் பெற்ற கருமுட்டை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை இணை இயக்குனர்

16 வயது சிறுமியிடம் கருமுட்டையை பெற்று விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சேலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்வதாகவும் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சேலத்தில் பேட்டி அளித்த அவர் சிறுமியிடம் இருந்து பெற்ற கருமுட்டைகள் ஆந்திரா கேரளா மாநிலங்களுக்கு விற்கப்பட்டது தெரியவந்து உள்ளதாக கூறினார். இருபத்தி ஒரு வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அனுமதியோடு எடுக்க வேண்டும் என்று விசுவநாதன் கூறினார்.

 

Tags :

Share via