இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி.
மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலியானார். மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த நடராஜன்(52). என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹார்விபட்டி சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :