புதிய நாடாளுமன்றம்.. ஜனாதிபதி திறக்கக் கோரி வழக்கு

by Staff / 25-05-2023 03:02:07pm
புதிய நாடாளுமன்றம்.. ஜனாதிபதி திறக்கக் கோரி வழக்கு

டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மே 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய் சுக்கேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் மட்டுமே திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Tags :

Share via