இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு.

by Editor / 27-05-2023 09:29:33pm
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவக்குமார், சஞ்சய், வினோத் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via