வந்தே பாரத் ரயில் தொடங்கிவைப்பு

by Staff / 29-05-2023 03:38:51pm
வந்தே பாரத் ரயில் தொடங்கிவைப்பு

அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, உண்மையான சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் வகையில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் உள்கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வசர்மா, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அசாம் ஆளுநர் குலாப் சந்த் ஆகியோர் பங்கேற்றனர். நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via