மைனர் சிறுமி கொடூர கொலை

by Staff / 29-05-2023 03:26:05pm
மைனர் சிறுமி கொடூர கொலை

தலைநகர் டெல்லியில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மைனர் சிறுமியை ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். டெல்லி ஷஹாபாத் பால் பண்ணை பகுதியில் சாஹல் என்ற இளைஞர் மைனர் பெண்ணை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கியுள்ளார். கத்தியால் பலமுறை குத்திவிட்டு, கல்லால் தாக்கினார். சிறுமி கீழே விழுந்ததும், சிறுமி மீது பலமுறை கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

 

Tags :

Share via