கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்த மீனவரை முதலை கடித்ததில் கையில் காயம்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயராமன் (55) என்பவர் சித்தமல்லி அருகே திம்மாபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விசுறு வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை கடித்தது.இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த ஜெயராமனை அப்பகுதியினர் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அவருக்கு கையில் 7 இடங்களில் தையல் இடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags : கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்த மீனவரை முதலை கடித்ததில் கையில் காயம்



















