முதியவர் தற்கொலை

மதுக்கூர் அருகே உள்ள காசாங்காட்டில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது60). இவர் தீராதவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சி மருந்தை (விஷம்) சாப்பிட்டார். இதில் உயிருக்குபோராடிய அவரை அக்கம் பக்கத்தினர் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய மகன் அலெக்ஸ் அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :