திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூலத்தில் குவாட்டர் பாட்டில்... ரூ.50 ஆயிரம் அபராதம்

புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் குவாட்டர் மது பாட்டிலும் வழங்கப்பட்டது. இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில், புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி மதுபானம் வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :