கோவில் மரம் விழுந்து முதியவர் பலி

by Staff / 02-06-2023 05:02:04pm
கோவில் மரம் விழுந்து முதியவர் பலி

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் உள்ள நூறு ஆண்டுகள் பழமையான ரவிச்சுற்று மரம் திடீரென விழுந்தது. கோவிலின் பிரதான வாசல் முன்புறம் உள்ள பெரிய மரம் காற்றில் இரண்டாக பிளந்து பக்தர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் கடப்பாவை சேர்ந்த ரிம்ஸ் ஓய்வு பெற்ற ஊழியர் டாக்டர் ராயதுர்கம் குரப்பா (வயது 72) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டிடிடி தலைவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via