ஜி-20: சென்னை ஐஐடியில் கருத்தரங்கம்

by Staff / 31-01-2023 01:19:37pm
ஜி-20: சென்னை ஐஐடியில் கருத்தரங்கம்

ஜி-20 தொடர்பான கல்வி பணிக்குழுக் கூட்டத்தையொட்டி சென்னை ஐஐடியில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. கல்விச் செயற்குழுக் கூட்டம் கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துக்காட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியுடன் நடந்து வருகிறது. இதில், நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் நாளான இன்று, 'கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில், மூன்று அமர்வுகளாக கருத்தரங்கம் நடக்கிறது. 'உயர் தர உயர் கல்வி கற்கும் வாய்ப்புகளின் அளவை செயல்படுத்துதல்' என்ற தலைப்பில், 2வது அமர்வு நடக்கிறது.

 

Tags :

Share via