தாய் இறந்ததால் மாற்றுத்திறனாளி மகன் தற்கொலை

by Staff / 11-11-2023 02:26:51pm
தாய் இறந்ததால் மாற்றுத்திறனாளி மகன் தற்கொலை

கருங்கல் அருகே பாலப்பள்ளம், பல்லடியான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜினில் ஜெயக்குமார் (43). இவருடைய தாயார் சொர்ணம். சிறுவயதில் ஏற்பட்ட நோயின் காரணமாக ஜினில் ஜெயக்குமார் திடீரென கண் பார்வை இழந்தார். இதனால் அவர் தன்னுடைய தாயார் சொர்ணத்தின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சொர்ணம் கடந்த 1-ம் தேதி திடீரென இறந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மாற்றுத்திறனாளி ஜினில் ஜெயக்குமாரால் மீள முடியவில்லை. தொடர்ந்து அவர் சோகத்தில் இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைத்த அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அப்பகுதியினர் சிலர் இதை பார்த்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via