சாலை விபத்து - வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு, 30பேர் படுகாயம்
மத்திய பிரதேசம் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய வேலைகள் செய்வதற்காக அருவாள், கத்தி, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றர்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்து கோவில்பட்டி செல்வதற்காக லாரியில் 30-க்கும் மேற்பட்டோர் லாரியில் சென்று கொண்டிருந்தனர்அப்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை-துரைச்சாமிபரம் விளக்கு அருகே மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது லாரியின் டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் லால் பின் சிங் என்பவர் சம்பவ இடத்திலே பிரதானமாக உயர்ந்தார், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், தகவல் அறிந்து விரைந்து சென்ற எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி, தூத்துக்குடி, எட்டையாபுரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், லால் பின் சிங் என்பவரின் உடலை எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர், இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.லாரியில் அதிகளவு இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த பாரம் தாங்காமலே டயர் வெடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர், மொழி தெரியாத ஊரில் இறந்த உறவினரின் உடலைத் அழுது கொண்டே தேடி அலைந்த மத்திய பிரதேச பெண்மணி.
Tags :