ஷிண்டேவை வெளியேற்றி அஜித் பவார் முதல்வராவார் - சஞ்சய் ராவத்

by Staff / 03-07-2023 02:54:52pm
ஷிண்டேவை வெளியேற்றி அஜித் பவார் முதல்வராவார் - சஞ்சய் ராவத் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் அஜித் பவார் என்சிபியை பிரித்து துணை முதல்வராக பதவியேற்ற பிறகு அடுத்த முக்கியமான அரசியல் நகர்வு குறித்து கணித்துள்ளார். சிவசேனாவில் இருந்து விலகிய ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஷிண்டேவுக்கு பதிலாக அஜித் பவார் முதல்வராக பதவியேற்பார் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷிண்டே மற்றும் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று இன்று, சஞ்சய் ராவத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
 

Tags :

Share via