சட்டம் - ஒழுங்கு சரியில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

by Staff / 06-07-2023 05:23:01pm
சட்டம் - ஒழுங்கு சரியில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
 

Tags :

Share via