50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

by Staff / 07-07-2023 03:54:03pm
50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் ராஜ்குமார் (வயது 28), இவர் அதே பகுதியில் தனியார் குடிநீர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் பணிபுரியும் பழனிசாமி மகன் விக்னேஷ் (21), ஆத்தூர் பகுதியை சேர்ந்த அருள்மணி (26) ஆகியோருடன் ஒரு காரில் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டி வந்துள்ளார். ஏற்காட்டை சுற்றி பார்த்த அவர்கள், மதுபோதையில் சேர்வராயன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தாங்கள் தங்கிய விடுதி அறைக்கு திரும்பிய போது மலைப்பாதையில் எதிரே சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது ராஜ்குமார் ஓட்டி சென்ற கார் 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த விக்னேஷ் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். ராஜ்குமார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
 

Tags :

Share via