பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம்

by Staff / 08-07-2023 11:18:43am
பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் ஜூலை 7 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேகாபம் அப்மனோலா கிராமத்தில் நடைபெற்ற இந்த மத நிகழ்ச்சியில் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via