கமுதியில் இரண்டு மாதத்தில் நாய் கடித்து 12 அரிய வகை மான்கள் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு மலட்டாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் அரிய வகையைசேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன.தற்போது வனப்பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவி வருவதன் காரணமாக தண்ணீர்மற்றும் உணவுத் தேடி அவ்வப்பொழுது புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக அந்தபகுதியிலுள்ள மண்டலமாணிக்கம் கிராமத்திற்குள் வழக்கமாக மான்கள் வந்து சென்றவண்ணமுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கமுதி மண்டலமாணிக்கம் கிராமத்திற்குள்உணவுத்தேடி வந்த ஐந்து வயது அரியவகை புள்ளிமானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தி கடித்ததில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.
கமுதி கடலாடி முதுகுளத்தூர் சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களில் 12 அரியவகை புள்ளிமான்கள் உயிரிழந்துள்ளதாகவும், அரிய வகை புள்ளிமான்இனத்தை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : Dog bites 12 rare deer in two months