இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை- கனடா அறிவிப்பு

by Editor / 24-07-2021 09:24:06am
இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை- கனடா அறிவிப்பு

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது. ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதன்படி, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து விளக்கம் அளித்துள்ள கனடா போக்குவரத்து துறை மந்திரி, “ மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

 

Tags :

Share via