திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

by Staff / 12-07-2023 01:02:26pm
திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிப்பிரியா, கணவர் அருள்லால், மகள் மோனிகா ஆகியோர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். மூன்று பேரின் உடல்களையும் மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திமுகவினரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via