நெல்லை பல் பிடுங்கப்பட்ட விவகாரம் 2 நாள் விசாரணை.

by Editor / 18-04-2023 08:29:02am
நெல்லை பல் பிடுங்கப்பட்ட விவகாரம் 2 நாள் விசாரணை.

நெல்லை அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அதிகாலை  12 -15  மணிவரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணை பின்னர் விசாரணை நிறுத்தப்பட்டது. ஒரு டைப்பிஸ்ட் மட்டுமே பணியில் உள்ளதால் அவர் தூங்கி விடுவதால் விசாரணை நிறுத்தம் செய்யப்பட்டது.நேற்று  மொத்தம் 10 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்த இயலவில்லை. மீண்டும் இன்று காலை 11 மணிக்கு விசாரணை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் இன்று இரண்டாவது நாளாக 11 மணிக்கு விசாரணையை தொடங்குகிறார் நேற்று 10 பேரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள நான்கு பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

 

Tags :

Share via