சமூக நல இயக்குநா் அலுவலக கட்டடம்:முதலமைச்சா் திறந்து வைத்தாா்
சென்னையில் சமூக நலத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சா் மு. க. ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
சமூக நல இயக்ககத்துக்கு சென்னை காமராஜா் சாலையில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 26ஆயிரத்து 44 சதுர அடி பரப்பில் ரூ. 9. 82 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாகமுதலமைச்சா் திறந்து வைத்தாா்.. இந்தக் கட்டடத்தில் சுமாா் 120 பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் பணிபுரியும் வகையில் அலுவலகக் கட்டடங்கள், இரண்டு கூட்டரங்குகள், மின்தூக்கி வசதி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஆணையா் வே. அமுதவல்லி, கூடுதல் இயக்குநா் ச. ப. காா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்..
Tags :