அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் நீதிமன்றத்தில் சரண்

by Editor / 18-07-2023 02:14:14pm
அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த சந்திரபாண்டியன் இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்துவரும் நிலையில் நேற்று மாலை பாலமேடு அருகே வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மாவூத்துபட்டியை சேர்ந்த  அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், விஜயகுமார், தளபதி, கர்ணன் ஆகிய 6பேர் மதுரை மாவட்ட 6ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தானகுமார் முன்பாக சரணடைந்தனர்.

 

Tags : admk

Share via