தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.,  அதிகாரிகள் மாற்றம்

by Editor / 14-05-2021 04:01:49pm
 தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.,  அதிகாரிகள் மாற்றம்



 தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:*தமிழக போலீஸ் அகடமி இயக்குநராக பிரதீப் வி. பிலீப்*ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபி ஆக ஜெயந்த் முரளி*குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால்*பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி.,யாக ஆபாஷ்குமார்*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் ஆக ஜெயராமன் *பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி.,ஆக தினகரன்*ஆயுதப்படை பிரிவு ஐஜி லோகநாதன்*தொழில்நுட்ப சேவைப்பிரிவு டிஐஜி ஆக ராஜேந்திரன்*சேலம் போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனராக பா.மூர்த்தி*தூத்துக்குடியில் உள்ள போலீஸ் ரெக்ரூட் பள்ளி முதல்வர்/ எஸ்.பி.,ஆக செந்திலும்*மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி., ஆக மகேஷ்வரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via