முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான 6 வழக்குகள் ரத்து.

by Editor / 20-07-2023 05:32:59pm
 முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான 6 வழக்குகள் ரத்து.

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான ஆறு வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். சிவி சண்முகம் மீதான இரு வழக்குகளில் ஆறு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசை கண்டித்து போராடியதால் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, சி.வி.சண்முகம் மீதான ஆறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

 

Tags :

Share via