பழிக்குபலியாக ஒருவர் கொலை..?காவல்துறை விசாரணை.

by Editor / 05-08-2023 11:17:04pm
பழிக்குபலியாக ஒருவர் கொலை..?காவல்துறை விசாரணை.

ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 33). இவர் மீது செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆடு, மணல் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாயாண்டி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி செல்வி (30) என்பவரும் காயம் அடைந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலையாக்கு பழிக்கு பலியாக ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்த புதுக்குடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கடைக்குள் வைத்து வெட்டிக்கொலை. செய்யப்பட்டுள்ளதாக கூறப்ப்டுகிறது.சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via