நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

by Admin / 09-08-2023 08:41:45am
 நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

சபரிமலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆடி மாத நிறைபுத்தரி பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று ஆகஸ்ட் 9-ம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜைக்காக இன்று ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமா பக்தர்கள் செல்ல தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via